நுவரேலியா சீத்தா எலிய அம்மன் அசோக வனம் அனுஶ்ரீ தியான மண்டப திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆன்மீக தலைவர் சுபா தீதி

02 Aug, 2025 | 06:05 PM
image

உலகில் வாழும் மக்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரும், அன்பர்களால் சுபா தீதி என்று  அழைக்கப்படும் ஆன்மீக குருவான இவர், மகிழ்ச்சி, சந்தோசம் மற்றும் முழுமையான ஆன்மீக வாழ்க்கையின் ஜோதியாகத் திகழ்கிறார். 

தீதி, மிகச் சிறந்த ஆன்மீக குரு, புகழ்பெற்ற தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். தனது சிறு வயதிலேயே, வாழ்க்கை என்பது அன்றாட வேலைகளைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக மிகவும் ஆழமான அர்த்தத்தையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்டுள்ளது என்பதை நன்கு உணர்ந்தவர்.

நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் சுபா தீதி சிறுவயதிலேயேஆர்வமாக இருந்தார். தனது உண்மையான சுயத்தை தனது 13 வயதில் உணர்ந்த அவர், தனது குருவை (பகவான்) சந்தித்தார். அன்று தொடக்கம் அவரது  ஆன்மீக பயணம் ஆரம்பமானது.  

நிலையான அறிவுச் செல்வத்தைக் கொண்ட சுபா தீதி, தான் பெற்ற கல்வி மூலம் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்கள் தங்களை கண்டறியவும் வழிகாட்டுகிறார். 

அவருடைய நேர்மறையான சிந்தனை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் செயல்கள் மூலம், சுபா தீதி அவர்கள் எங்கள உண்மையான இயல்பை உணர உதவுகிறார், மேலும் நாம் நாளாந்தம் அனுபவிக்கும் மன அழுத்தம், பதட்டம், கோபம் மற்றும் பொறாமை போன்ற உணர்வைக் கடக்க நம்மை வழிநடத்துகிறார்.

நிபந்தனையற்ற அன்பு மட்டுமே எமது ஆன்மாவை குணமாக்கும் ஒரே ஒரு சர்வதேச மொழி என்ற எண்ணம் கொண்டவர். தனித்து செயற்படும் ஆளுமையான தலைவர்களை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர். நற்பண்பு கொண்ட சிறந்த தலைவர்களை உருவாக்குவதன் ஊடாக நாட்டை சிறப்பாக வழிநடத்த முடியும் என்ற ஆழமான எண்ணம் கொண்ட மிகச் சிறந்த ஆன்மீக தலைவர் சுபா தீதி அவர்கள் நுவரேலியா சீத்தா எலிய அம்மன் அசோக வனம் அனுஶ்ரீ தியான மண்டப திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளார்.  

முழுமையான விழிப்புணர்வு, உலக ஞானம் மற்றும் அனுபவத்துடன், அவரது போதனைகள் எங்கள் ஒவ்வொருவருக்கும் உயர்ந்த தளத்திலிருந்து அறிவுபூர்வமாக செயல்படும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கவும் நடத்தவும் உதவுகின்றன.

அவரது அனைத்து போதனைகளும் உண்மையான நடைமுறை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவரின் வழிகாட்டுதல்கள், ஆன்மீக ரீதியில் உயர்ந்த நிலையை அடையவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தொழில்முறை உலகில் வாழ்க்கையை வெற்றி கொள்ளவும் உதவுகின்றன.

தீதியின் போதனைகள் ஊடாக எங்கள் எண்ணங்களை எழுப்புதல், நாங்கள் யார் என்பதைக் கண்டறிய எங்கள் உள்ளத்தில் ஆழமாக மூழ்குதல், உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுதல் மற்றும் நாங்கள் எவ்வாறு ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து நிலையான மகிழ்ச்சியைப் பெறுதல் ஆகியவற்றை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு உயிருள்ள மனதையும் உயர்த்துவதும், ஒவ்வொரு உயிருள்ள இதயத்தையும் அறிவூட்டுவதும் தீதியின் நோக்கம் ஆகும், இது அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் ஒரே ஒரு நுழைவாயிலாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46