இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகை வெளிப்படுத்துங்கள் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்து

31 Jul, 2025 | 05:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது திருகோணமலை முத்துநகரில்  மக்களின் விவசாய காணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்திருக்கிறது. அதேபோன்று டொக்யாட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் தான் இவ்வாறு செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறததென ஐக்கிய  தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் இதுவரை 6நாடுகளுக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் இவ்வாறு வெளிநாடுகளுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் எதுவும் நாட்டுக்கு  வெளிப்படுத்தியதில்லை.

குறிப்பாக இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அரசாங்கம் அதுதொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. அரசாங்கம் இவ்வாறு இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை மறைப்பதாக இருந்தால், அதில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்கள் இருக்க  வேண்டும். அதனாலே அதனை வெளியிட அச்சப்பட்டு  வருகிறது.

திருகோணமலை முத்துநகரில்  பல ஆண்டு  காலமாக விவசாயம் செய்துவந்த விவசாய பூமியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மக்கள் இன்று வீதிக்கிறங்கி போராடி வருகின்றனர்.

அதேபோன்று கப்பல்கள் திருத்தும் டொக்யாட் நிறுவனத்தையும் இந்திய நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இந்திய அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலா என்ற சந்தேகம் எழுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும்போது பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அவர் அந்த விஜயத்தின் மூலம் நாட்டுக்கு ஏதாவது நன்மையை பெற்றுக்கொண்டே நாடுதிரும்புவார்.

ரணில் விக்கிரசிங்க  இவ்வாறு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொண்டால், அந்த விஜயத்தின் பின்னர், அதுதொடர்பில் நாட்டுக்கு அல்லது பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்துவார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரை 6 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அதன்  மூலம் நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது என யாருக்கும் தெரியாது.

அதேநேரம் உற்பத்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால் இன்று செவனகல சீனித் தொழிற்சாலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உரிய நேரத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க தவறி வருவதால் குறிப்பாக நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.  இவ்வாறு  நாட்டின் உற்பத்திகள் வீழ்ச்சியடையும்போது அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் அரிசி, சீனி போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே ஆர்வம் காட்டிவருகிறது. இதன்மூலம் அரசாங்கம் பாரிய லாபத்தை பெறுகிறது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05