நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் 98 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நோயாளர்களுள் 30 சதவீதமானோர் பாடசாலை மாணவர்களாவர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோயினால் 98 ஆயிரத்து 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 276 பேர் இதுவரையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நோயாளர்களுள் 30 சதவீதமானோர் பாடசாலை மாணவர்களாவர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பாடசாலை சுற்றாடல் பகுதியை டெங்கு நுளம்பு அற்ற வலயமாக மேம்படுத்தும் முழுமையான பொறுப்பு பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டு சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறை பணித்துள்ளது.
மேலும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நாட்டிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் டெங்கு அச்சுறுத்தல் உள்ள வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனஞ் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் மற்றும் மழையுடன் கூடிய காலப்பகுதி தொடர்பில் கவனம் செலுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது தொடர்பிலும் வேலை த்திட்டங்கள் எடுக்கவும் சுகாதார அமைச்சு செயற்படுவதாக கூறியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM