(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசியும் ஐந்தாவதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில், மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்ட்டிஸ் மற்றும் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது லீ ஃபோர்ட்டிஸை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டிப் பேசிய கௌதம் கம்பீர், 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை' என கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது திட்டவட்டமாக தெரியவராத போதிலும், கம்பீரிடம் ஃபோர்ட்டிஸ் ஏதோ கூறியதை அடுத்தே கம்பீர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தத் தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் வியாழக்ழமை (31) ஆரம்பமாகவுள்ள கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
இதனைக் கருத்தில்கொண்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பயிற்சியின்போது உணர்ச்சிவசப்பட்ட கம்பீர், மைதான பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் துடுப்பாட்டப் பயிற்றுநர் சித்தன்ஷு கோட்டாக் தலையிட்டு நிலைமை கட்டுப்படுத்தியுள்ளார்.
'இதனை நான் முறையிடுவேன்' என ஃபோர்ட்டிஸ் தெரிவித்ததால் வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது.
'உங்களுக்கு என்ன முறையிடவேண்டுமோ அதை போய் முறையிடுங்கள்' என கம்பீர் சற்று காரசாரமாக பதிலளித்துள்ளார்.
இதனை அடுத்து கோட்டாக் தலையிட்டு, மைதான பராமரிப்பாளரை தனியாக ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று 'நாங்கள் எதையும் சேதப்படுத்த மாட்டோம்' என கூறியுள்ளார்.
இந்தியாவின் மற்றைய பயிற்றுநர்களான மோர்னி மோர்க்கல், ரெயான் டுஷே ஆகிய இருவரும் இந்த வாக்குவாத்தை கேட்டவண்ணம் இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் எதிற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாகாத போதிலும் அவர்கள் இருவரும் பயிற்சிக்கான ஆடுகளங்களின் தன்மை குறித்து வாதிட்டிருக்கலாம் என தெரிகிறது.
எவ்வாறாயினும் மீண்டும் ஃபோர்ட்டிஸை நோக்கி திரும்பிய கம்பீர், எனது அணி 'என்ன செய்யக்கூடாது' என அவர் சொல்லத் தேவையில்லை என்றார்.
'நாங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு சொல்ல முடியாது. நீங்கள் வெறுமனே ஒரு மைதான பராமரிப்பாளர். அதற்குமேல் எதுவும் இல்லை' என கம்பீர் தெரிவித்தது வீடியோவில் காணப்பட்டது.
அதன் பின்னர் இருவரும் தத்தம் வழிகளில் சென்றதுடன் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை கம்பீர் மேற்பார்வை செய்யத் தொடங்கினார்.
பின்னர் மைதானத்திலிருந்து தனது அறையை நோக்கி சென்ற ஃபோர்ட்டிஸ், 'இது ஒரு மிக முக்கியமான போட்டி. அவர் (கம்பீர்) உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM