ஏழு வருட இடைவெளியின் பின்னர் செலான் வங்கி அண்மையில் மெர்கன்டைல் மேசைப் பந்து சங்கத்தின் (MTTA) நிறுவனங்களுக்கு இடையேயான Knockout மேசைப் பந்து சம்பியன்ஷிப்பின் ‘A’ பிரிவு பட்டத்தை மீண்டும் வென்றது. 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் செலான் வங்கி முதன்முதலாக ‘A’ பிரிவில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு முதல், செலான் மேசைப் பந்து அணி கடந்த 20 ஆண்டுகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் இறுதிப் போட்டியை எட்டியுள்ளமை விளையாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது.
அணியின் மூலோபாய ஆட்டத்தை எடுத்துக்காட்டும் வகையில் அரையிறுதியில் 99X Technologies அணியை 3-2 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்திய செலான் வங்கி, இறுதிப் போட்டியில் MAS Holdings அணியை 3-1 என்ற புள்ளி அடிப்படையில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை பெற்றது.
வங்கியின் வெற்றிப் பயணத்திற்கு சாலித ரஞ்சனவின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததுடன் இறுதிப் போட்டியை வெல்வதில் அவரது திறமை பெரும் பங்காற்றியது.
நான்கு முறை தேசிய சம்பியனும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாலித, knockout சம்பியன்ஷிப் முழுவதும் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். இவர் இரட்டையர் பிரிவில் சசிக விஜேசூரியவுடன் இணைந்து இரட்டையர் பிரிவை வென்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM