எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலாவது போட்டியும் இலங்கையில் தான் , அதேபோல் முதல் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையும் இலங்கையில் தான் அந்தவகையில் எனது பயிற்றுவிப்பாளர் பதவியும் இலங்கையில் தான் முதன் முதலாக அமைந்துள்ளதென இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 18 வயதில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து முதலாவது போட்டியை இலங்கை மண்ணிலேயே விளையாடினேன்.
அதேபோன்று கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக வந்தபோது அதுவும் 1994 ஆம் ஆண்டளவில் முதல் போட்டிக்கான வர்ணனையை இலங்கை மண்ணிலேயே ஆரம்பித்தேன்.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுபேற்றதன் பின் இலங்கை மண்ணில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே எனது பயிற்றுவிப்பாளருக்கான பணியை நிறைவேற்றவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM