(எம்.மனோசித்ரா)
சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பதவிநிலைகளையும் அங்கத்துவங்களையும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நியமனங்கள் ஜே.வி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சியின் பிரதேச பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்களுடன் சிலாபம் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு, பொது மக்களின் உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தை அடிமட்ட ரீதியிலிருந்து பாதுகாப்பதற்கும், அமைதியைப் பேணுவதற்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் முன்னர் செயற்பட்டு வந்தன. இந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சமூகத் தலைமை மற்றும் சமூகத்தின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, இது ஒருபோதும் அரசியல்மயமாக்கப்படவில்லை.
கட்சி அரசியலில் ஈடுபடாதவர்களுக்கும், கட்சி அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் இதன் பதவி நிலைகளும் அங்கத்துவங்களும் காணப்பட்டன. இன்று, சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பதவிநிலைகளையும் அங்கத்துவங்களையும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நியமனங்கள் ஜே.வி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சியின் பிரதேச பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏனைய தரப்பினர்கள் மீது அரசியல் அழுத்தத்தை பிரயோகிக்கும் தந்திர வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவறான செயலாகும். அனைவரும் அடி மட்டத்தில் கிராம நகர மட்டத்தில் வலுவாக ஒருங்கிணைந்தால் இந்த சட்டவிரோத அரசியல் செயல்முறையை தடுத்து நிறுத்த முடியும். இளைஞர் கழங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், ஓய்வூதிய சங்கங்கள் மற்றும் மரண சங்கங்களில் கூட இந்த தந்திர அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் சிவில் சமூக அமைப்புகளை அரசியல்மயமாக்கி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான அடிமட்ட பொது மக்கள் அபிப்பிராயம் வலுவாகி வரும் சந்தர்ப்பத்தில் அதனை கட்டுப்படுத்த இந்த கீழ்த்தரமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. முழு கிராமமும் நகரமும் இதற்கு எதிராக நின்று எதிர்ப்பு தெரிவித்த பிரதேசங்களிலும் இடங்களிலும் இந்த அரசியல் தந்திர முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.
அரசியல்வாதிகளின் அலுவலகங்கள் மூலம் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிக்கும் நடவடிக்கையையும் முறையையும் நாம் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வலுப்பட வேண்டும். இந்த சட்டவிரோத குழுக்களின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்த வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM