நீங்கள் இந்தப் பிறவியில் பெறவேண்டிய சுப பலன்கள் பெறாமல்.. கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்ட வகையில் கால பைரவரை வணங்கினால் பலன் கிடைக்க தொடங்கும் என குறிப்பிடுகிறார்கள்.
கால பைரவர் எமக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய நல்ல பலன்களை விரைவாகவும் , நிறைவாகவும் தருவதில் அக்கறை காட்டுபவர் சனி பகவான் . ஆனால் நீங்கள் கடந்த பிறவியில் ஏதேனும் தவறு செய்து அதன் தண்டனையாக இந்த பிறப்பில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சனி பகவானின் கருணை பார்வை கிடைப்பதில் சங்கடம் நீடிக்கும். இந்த தருணத்தில் சனி பகவானை ப்ரீத்தி செய்ய வேண்டும். ஏனென்றால் அவரின் குருவான கால பைரவரை உறுதியாக பற்ற வேண்டும்.
கால பைரவர் வழிபாடு என்பது விசேடமானது. அபூர்வமானது. ஆனால் பலன்களை உறுதியாக வழங்குவார். கால பைரவர் சன்னதி கொண்டு எழுந்தருளும் ஆலயத்தை தெரிவு செய்து கொண்டு சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு பிடித்த செவ்வாழை மற்றும் மாதுளம் பழத்தை அவருக்கு நிவேதனமாக படைத்து உங்களது நட்சத்திரம் அவருடைய உடலில் எந்த பகுதியாக திகழ்கிறதோ..! அந்த பகுதியை உற்று அவதானித்து பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
கால பைரவரை வணங்கினால் அதிலும் குறிப்பாக மேலே விவரிக்கப்பட்ட பழங்களை நிவேதனமாக படைத்து வழிபட்டால் , உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய சுப பலன்கள் விரைவில் கிடைக்கும் என்பது திண்ணம்.
தொகுப்பு : சுபயோக தாசன்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM