(நெவில் அன்தனி)
ஜேர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள ரைன் ரூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய களனி பல்கலைக்கழக மாணவி ரசாரா விஜேசூரிய ஆறு நாட்கள் இடைவெளியில் இரண்டு தேசிய சாதனைகளை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார்.
பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை கடந்த 21ஆம் திகதி முறியடித்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டிய ரசாரா, ஐந்து தினங்கள் கழித்து கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற 50000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்னவுக்கு சொந்தமாக இருந்த தேசிய சாதனையை முறியடித்து இலங்கையின் புதிய நெடுந்தூர ஓட்ட நாயகி ஆனார்.
இந்த இரண்டு நெடுந்தூர ஓட்டப் போட்டிகளிலும் ரசாராவினால் பதக்கங்கள் பெற முடியாவிட்டாலும் பிரசித்திபெற்ற ஐரோப்பிய, ஆபிரிக்க வீராங்கனைகளுடன் போட்டியிட்டதன் மூலம் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார்.
ரைன் ரூர் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 12.20 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 52.60 செக்கன்களில் ஓடி முடித்த ரசாரா விஜேசூரிய, 2021இல் கயன்திகா அபேரட்னவினால் நிலைநாட்டப்பட்ட 15 நிமிடங்கள், 55.84 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 32 நிமிடங்கள் 28.02 செக்கன்களில் நிறைவுசெய்த ரசாரா விஜேசூரிய அப் போட்டியிலும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
அப் போட்டியில் அவர் 8ஆம் இடத்தையே பெற்றார்.
தென் கொரியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள், 21.26 செக்கன்களில் நிறைவுசெய்து தனது முந்தைய தேசிய சாதனையை (33:39.10) ரசாரா விஜேசூரிய புதுப்பித்திருந்தார். இப்போது அந்த சாதனையையும் ரசாரா புத்துப்பித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM