புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பு-13, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையின் வளாகத்தில் மாலை 4 மணிக்கு கொண்டாடவுள்ளதென அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.
இதில் விசேட அம்சமாக பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் குறும்படத்துக்கான கதை சொல்லும் நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு கதை சொல்ல முடியாதவர்கள், பிரதிகள் மூலம் கலந்து கொள்ள முடியும்.
பிரதிகள் அன்றைய தினம் வாசிக்கப்பட்டு அவையோரின் தீர்ப்புக்கு ஏற்ப ஒரு கதை தெரிவு செய்யப்படுவதுடன் அது திரைவடிவம் பெறும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM