இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கிடையே மட்டுமல்லாமல் இந்தியா இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா துறை மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா–இலங்கை உணவுப் பண்பாட்டு பண்டிகைத் திருவிழா கண்டி சஹஸ் உயன மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி மாவட்ட ஹொட்டல் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் இந்திய தூதுவர் வி.எஸ். சரண்யா தலைமையிலான குழு முன்னிலை வகித்தது.
விழாவின் பிரதம அதிதியாக வட மேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமார ஸ்ரீ வர்ண சூரிய கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது,
"இந்த உணவுப் பண்பாட்டு திருவிழா, இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார புரிதலையும், நட்புறவையும் வலுப்படுத்தும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது சுற்றுலா துறைக்கும் மேலும் நன்மை பயக்கும்." என்றார்.
இந் நிகழ்வில், குருநாகல் மாநகர பிரதி முதல்வர்,மத்திய மாகாண பிரதான செயலாளர் ஜி. எச். எம். ஏ. பிரேமசிங்க, செயலாளர் இந்திக உடத்த, கண்டி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுகத் மாசிங்க, கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் போது, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான மற்றும் தனித்துவமான கலாச்சார சமையல் முறை, போசாக்கு உணவுகள், பிரபலமான பானங்கள், புத்துணர்ச்சி தரும் உணவுகள் ஆகியவை காட்சிக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM