இலங்கைக்கு வருகை தந்திருந்த இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சீன பிரஜை நேற்று புதன்கிழமை (23) மாலை 05.10 மணியளவில் மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது இந்த சீன பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் உள்ள வர்த்தகர் ஒருவரை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சீன பிரஜை இணையவழி மோசடியுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM