நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதியில் பரப்புவதற்கான மணலை வழங்குவதில் இடர்ப்பாடு - அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை 

24 Jul, 2025 | 04:25 PM
image

(எம்.நியூட்டன்)

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அவ்வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவை முன்னிட்டு அடியவர்களின் நன்மை கருதி வீதிக்கு மணல் பரப்புவது வழக்கம். 

இந்த ஆண்டு மணல் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என அறிகிறோம். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகள் செய்யும் திருவீதி தார்வீதியாக உள்ளது. உடனடியாக மணல் வழங்குவதற்கான ஏற்பாட்டை பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யவேண்டும். 

இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காலந்தோறும் நான்கு வீதியும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து தெய்வீகமாக நடைபெறும் திருவிழாச் சிறப்பை பேணுவதற்கு அனைவரும் உடன் அக்கறை எடுங்கள். இந்து சமய திணைக்களம், சமய விவகார அமைச்சு இத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். 

பல ஆயிரம் மக்கள் கூடும் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக் கால ஒழுங்குகளை பேண உதவுங்கள். இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்தவர்களும் கூடிய அக்கறை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில்  அனைவரது கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24