இன்றைய திகதியில் எம்மில் சிலருக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக கை விரல்கள் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு இரண்டு கைகளிலும் உள்ள பத்து விரல்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ இழந்து விடக் கூடும் .இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் இதற்கு பொருத்தமான நிவாரணத்தை வழங்க இயலும் என தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களது கால் விரல்களை பாவிப்பதை விட.. கை விரல்களை தான் அதிக அளவில் பாவிக்கிறார்கள். இதனால் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கைவிரல்களை இழந்தால்.. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள் கால்களில் இருந்து விரல்களை அகற்றி அதை கைகளில் பொருத்தி அதன் இயல்பு தன்மையை மீட்டெடுக்கிறார்கள்.
இந்நிலையில் எம்மில் பலருக்கும் கால் விரல்கள் இல்லாமல் நடக்க இயலுமா ? என்ற சந்தேகம் எழும். கால் விரல்கள் இல்லாமல் எம்மால் காலை பாவித்து நடக்க இயலும் என்றும், இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை நோயாளிகள் பெற வேண்டியது இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அத்துடன் கால் விரல்கள் இல்லாதது தொடர்பாக நோயாளிகள் உளவியல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளானால்.. அவர்களுக்காக செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கால் விரல்கள் தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. இதனை சத்திர சிகிச்சை நிபுணர்கள் மூலம் பொருத்தமாக மேற்கொண்டு இதிலிருந்து நிவாரணம் பெற இயலும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வைத்தியர் இப்ராஹிம் - தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM