ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்ட்டன் டெபர்ட்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி, பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறும், இந்த பாடசாலைக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறும் வலியுறுத்தி அப்பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நோர்ட்டன் டெபர்ட்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகள் காணப்படுவதாகவும் சுமார் 185 மாணவர்கள் அந்த பாடசாலையில் கல்வி பயில்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த பாடசாலையில் 5 ஆசிரியர்கள் மட்டுமே கடமையாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் தெரிவித்தனர்.
இப்பாடசாலையில் 12 ஆசிரியர்கள் பணி புரிந்து வருவதாக வலய கல்விப்பணிமனை தெரிவித்தாலும் வழமையாக அத்தனை ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் போதியளவு ஆசிரியர்களை நியமிக்கும்படி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM