மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனை 17 ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் (20) வியன்னா கால்வாய் ஒன்றில் வழுக்கி விழுந்த தனது காதலனை காப்பாற்ற முற்பட்ட வேளையில் பெண் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணமல் போய் உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கம் 453, குடா கம்மான 10, வெலிகத்த பகுதியில் வசிக்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய மணவியே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காதலனுடன் 17 ஆம் கட்டைப் பகுதிக்கு அருகில் வியன்னா கால்வாய்க்கு அருகில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, காதலன் வியன்னா கால்வாயில் தவறி விழுந்துள்ளார் அவரைக் காப்பாற்ற முயன்றபோது குறித்த இளம் பெண்ணும் கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், அந்த இடத்தை கடந்து சென்ற மஹியங்கனை காவல் பயிற்சி கல்லூரியின் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் குறித்த இளைஞன் சத்தம் இடுவதை அவதானித்து உடன் தண்ணீரில் குதித்து அந்த இளைஞனை மீட்டுள்ளனர்.
பின்னர் குறித்த இளைஞன் தனது காதலி நீரில் அடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார் பின்னர் ஊர் மக்கள் மஹியங்கனை பொலிஸார் இணைத்து குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இன்றும் இளம் பெண் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM