ஆடி மாதம் வந்துவிட்டால் எம்மில் பலரும் இறை வழிபாட்டிற்கான மாதமாக கருதி, தங்களது குலதெய்வ வழிபாடு- இஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தெய்வ வழிபாடு- ஆகியவற்றை மேற்கொள்வார்கள். இந்தத் தருணத்தில் எம்முடைய தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சமக் குறிப்புகளையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : செம்பருத்தி பூ, ஏலக்காய், கிராம்பு , பச்சை கற்பூரம், அன்னாசி பூ
ஆடி மாதம் முழுவதும் நாளாந்தம் உங்களுடைய பூஜை அறையில் மேலே விவரிக்கப்பட்ட ஐந்து பொருட்களையும் வைத்து பூஜை செய்ய வேண்டும். செம்பருத்தி பூவை மட்டும் நாளாந்தம் புதிதாக இடம்பெறச் செய்ய வேண்டும். உங்களுக்கு வாஸ்து தெரிந்திருந்தால் அல்லது உங்களிடம் கைபேசி இருந்தால் அதில் பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக தென்மேற்கு திசையை துல்லியமாக அவதானித்து, அங்கு இந்த பூஜை பொருட்களை வைத்து வழிபட்டால்.. தன வரவு அதிகரிக்கும்.
எம்மில் பலரும் முருகனை மட்டுமே நாங்கள் வணங்குவோம் என சொல்வர். அதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறும் ஆடி கிருத்திகை தினத்தன்று உங்களது பூஜை அறையில் உள்ள முருக பெருமானின் திருவுருவ படத்திற்கு முன்பு செம்பருத்தி இலை ஒன்று + சிறிதளவு வெட்டி வேர் இந்த இரண்டையும் சமர்ப்பித்து, உங்களது பிரார்த்தனையை மேற்கொண்டால்.. தன வரவு அதிகரிக்கும். உங்களது கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அன்றைய திகதியில் விரதம் இருந்து இத்தகைய பிரார்த்தனையை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது அனுபவ பூர்வமான உண்மை.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM