துப்பாக்கிச் சூட்டுகாயங்களுடன் 13 யானைகள் சிகிச்சை பெற்றுவருகின்றன - வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்

Published By: Digital Desk 3

17 Jul, 2025 | 04:40 PM
image

'பாத்திய' என்றழைக்கப்படும் காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டு காட்டு யானைகள் உட்பட 13 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு திணைக்களம் புதன்கிழமை (16) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத்,  

அநுராதபுரத்தில்  07 யானைகளும், பொலன்னறுவையில் 3 யானைகளும், வவுனியாவில் ஒரு யானையும், தெற்கில் 02 யானைகளும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன.

பாத்திய யானைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டதாக கடந்த மே மாதம் 18 ஆம் திகதி அன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது. 19 ஆம் திகதி  கால்நடை மருத்துவர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்தார்.

யானையை பரிசோதனை செய்த போது குணமடைந்த நிலையில் சில துப்பாக்கி சூட்டு காயங்களும் முன்னங்காலில் ஒரு கட்டியும் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர்  நாயகம் ரஞ்சன் மாரசிங்க,

கடந்த ஆறு மாதங்களில் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் 17 சதவீதமான யானைகள் உயிரிழந்துள்ளன.

அத்தோடு, இலங்கையில் 20 சதவீத யானை இறப்புகள் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் ஏற்படுவதாகவும், இதுபோன்ற இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஏற்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

சட்டப்பூர்வ ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களை மதிப்பிட்டு அராசாங்கம் விசாரணைகளை எளிதாக்க முடியும்  எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57