செய்வினை தோஷம் நீங்குவதற்கான எளிய பரிகாரம்..!?

14 Jul, 2025 | 03:02 PM
image

எண்ணியவை எல்லாம் எண்ணியபடி நடப்பதில்லை. எம்மில் பலரும் தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்த வகையில் நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் விரிவாக திட்டமிட்டு பணியாற்ற தொடங்குவார்கள். ஆனால் அந்தக் காரியத்தில் வெற்றி கிடைப்பதில்லை அல்லது முழுமையான வெற்றி கிடைப்பதில்லை. 

இதற்கான காரணத்தை துல்லியமாக அவதானிக்கும் போது செய்வினை - கண்ணேறு - பில்லி - சூனியம் - என்ற எதிர்மறை சக்திகளின் பங்களிப்பு இருப்பதை கண்டறியும் போது இதிலிருந்து விலகுவதற்கான சூட்சமத்தை உணர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பார்கள். 

இந்தத் தருணத்தில் எம்முடைய தொடர்ச்சியான மற்றும் சீரான முன்னேற்றத்தில் தடைகளும், தாமதங்களும் தொடர்ந்து ஏற்பட்டால் அதனை நீக்குவதற்கான எளிய பரிகாரத்தையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

தமிழகத்திற்கும், புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமையப்பெற்றிருக்கும் திருவக்கரை எனும் இடத்தில் உள்ள வக்ர காளியம்மன் தரிசிக்க வேண்டும். 

அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால வேளையில் இந்த வக்ர காளியம்மனை தரிசித்தால் உங்களது முன்னேற்றத்தில் உங்களுக்குத் தெரியாமல் ஏற்படுத்தி இருக்கும் தடை அகன்று விடும். 

அதே தருணத்தில் இந்த வக்ர காளியம்மனுக்கு.. பாதிக்கப்பட்டவர்கள் என்ன வயதோ அந்த வயது எண்ணிக்கையிலான எலுமிச்சை பழத்தை மாலையாக கட்டி அம்மனுக்கு சாற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது வேண்டுகோளை சமர்ப்பித்தால் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி.

சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்தால்.. உங்கள் வயதுடைய எண்ணிக்கையிலான எலுமிச்சை பழ மாலையை சாற்றுவதுடன், 108 என்ற எண்ணிக்கையிலான நெய் தீபத்தையும் ஏற்றி வழிபட்டால் பிரச்சனையில் தீவிரம் குறைந்து முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.

உடனே எம்மில் சிலர் இங்கிருந்து இந்தியாவிற்கு சென்று திருவக்ர காளியம்மனை தரிசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பார்கள். ஆனாலும் கண்ணேறு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு என்ன மாற்று உபாயம்? என கேள்வி எழுப்புவார்கள். அதற்கும் எம்முடைய முன்னோர்கள் ஒரு வழியை காண்பித்திருக்கிறார்கள்.

உங்களது வீட்டிற்கு அருகே தனி சன்னதியுடன் இருக்கும் விநாயக பெருமானை தரிசித்து, 'மாய தடைகளை விலக வேண்டும்' என பிரார்த்தனை செய்து 12, 27 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலான தேங்காயை சிதறு காயாக உடைக்க வேண்டும். இந்த தேங்காயை பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவர்களே சிதறு காயை உடைக்க வேண்டும். 

அத்துடன் 12 , 27 ,108 என்ற எண்ணிக்கையிலான நெய் தீபத்தையும் ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் மேற்கொண்டால் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த மாய தடை விலகும். முன்னேற்றத்திற்கான பாதை புலப்பட தொடங்கும். 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம...

2025-12-11 14:38:49
news-image

எதிரிகளின் இடையூறு நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-12-10 15:16:10
news-image

முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

2025-12-09 18:49:34
news-image

நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம...

2025-12-08 15:58:11
news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54
news-image

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -...

2025-12-01 09:40:32
news-image

மாந்தி தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிமுறை..!?

2025-11-29 17:08:44