இந்தியாவின் அசாம் மாநிலத்தின் உள்ள பரலியாபார் கிராமத்தின் முகல்முவா பொலிஸ் பிரிவில், தனது விவாகரத்தை கொண்டாடிய மணிக் அலி என்பவர் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மணிக் அலியின் மனைவி பல முறை தகாத உறவில் ஈடுபட்டு, குடும்பத்தை பலமுறை கைவிட்ட நிலையில், மனைவியின் செயல்களால் மனமுடைந்த அலி, விவாகரத்து கோரி வழக்குத் தொடர முடிவு செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இருந்த போதிலும்,அவர் தனது மகளுக்காக மனைவியுடன் மீண்டும் இணைய முயற்சித்திருந்தார். ஆனால் தனது மனைவி மீண்டும் தகாத உறவுகளில் ஈடுபடுட்டு வந்ததால், மனமுடைந்த அவர் விவாகரத்திற்காக மனு தாக்கல் செய்து, சட்டப்படி பிரிந்துள்ளார்.
விவாகரத்துக்குப் பின்னர், "இனிமேல் நான் சுதந்திரமானவன்" என்று கூறி , 40 லீற்றர் பாலை தன்னுடைய உடலில் ஊற்றி, வெள்ளை சட்டை, நீல நிற நீளக் காட்சட்டை அணிந்த நிலையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி, 3 மில்லியனைத் தாண்டும் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். சிலர் “நல்ல தீர்மானம்” எனக் கூறுகின்றனர், மற்றும் சிலர் பாலை வீணடித்ததற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM