திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்களின் 'தூரத்து விண்மீனை கண்டேன்', 'விழிகளில் ஒரு வானவில்' ஆகிய இருநூல்கள் சனிக்கிழமை (12 ) வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வு, திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 03.00 மணியளவில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் மேயர் க.செல்வராஜா (சுப்ரா), சிறப்பு விருந்தினராக திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் திருமலை நவம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில், விசேட உரையை வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர், ஊடகவியலாளர் சரவணபவானந்தம் திருச்செந்தூரன் நிகழ்த்தினார்.
நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில், சிரேஷ்ட கலை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல வருட காலம் சேவையாற்றிய சிவஸ்ரீ அ.அரசரெத்தினம், பி.ரி.அஸீஸ், வே.சரவணபவ ஆனந்தம், விக்கி நவரட்ணம், ப.மதிபாலசிங்கம் ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM