கொமர்ஷல் வங்கி மட்டக்களப்பு மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளில் இரு வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம், இலங்கையில் விவசாய மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
விவசாயிகள், குறிப்பாக விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், நவீன, நிலையான பயிர்ச் செய்கை நடைமுறைகளை மேற்கொள்வதற்கான கருவிகள், அறிவு மற்றும் நம்பிக் கையுடன் அவர்களைத் தயார்படுத்துவதே இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.
மட்டக்களப்பில் உள்ள மாவட்ட விவசாய பயிற் சி நிலையத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு அறிமுக மற்றும் விழிப்புணர்வு அமர்வில் 75 க்கும் மேற் பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபற்றியதுடன் இந்த அமர்வில் நிதியியல் கல்வியறிவு, நவீன விவசாய இயந்திர ங்களின் பயன்பாடு மற்றும் நெல்பயிர்ச்செய்கையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகிய மூன்று முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
வெலிமடை மற்றும் பண்டாரவளை பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகளை இலக்காகக் கொண்டு, வெலிமடையில் உள்ள திவுரும்வெல ஆலயத்தில் நடத்தப்பட்ட மற்றொரு திட்டத்தில், மேட்டு நில பயிர்களுக்கான அரை-பாதுகாக்கப்பட்ட விவசாய நடைமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இந்த முயற்சியானது காலநிலை அழுத்தத்திலிருந்து விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மகசூல் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் மேம்பட்ட பயிர்ச்செய்கை நுட்பங்களுடன் விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இதில் பூச்சிகளுக்கெதிரான முகாமைத்துவம், நீர்ப்பாசனம் மற்றும் காலநிலை - எதிர்ப்பு விவசாயத்திற்கான நடைமுறை முறைமைகளை உள்ளடக்கியதுடன் மண் உணரிகள் மற்றும் சொட்டு நீர் பாசன முறைமைகளுக்கான கருவிகளைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM