இலங்கையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி மார்ச் 2025 இல் காலியான பின்னர், தற்போது வரை புதிய தலைவர் நியமிக்கப்படாததைத் தொடர்ந்து, ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் படி, RTI ஆணைக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன், ஒரு தலைவர் அவசியமானவர். தற்போதைய நிலவரப்படி, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் டி.என். சமரகோன் (2025 மே மாதத்தில் நியமிக்கப்பட்டவர்), சட்டத்தரணி கிஷாலி பிண்டோ-ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி மற்றும் ஏ.எம். நஹியா ஆகிய நால்வர் மட்டுமே செயலில் உள்ளனர். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபயரத்ன பதவி விலகியதிலிருந்து, தலைமைப் பொறுப்பு வெற்றிடமாகவே உள்ளது.
ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, இந்த நியமன தாமதம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதியாக பாதுகாப்பதிலும் இடையூறாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது. மேலும், இது போல வேண்டாமை தாமதங்கள் அரசியல் தலையீடுகளுக்கே வழிவகுக்கும் என்ற பொதுநம்பிக்கையை உருவாக்குகிறது எனத் தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமை ஆணைக்குழு மேன்முறையீடுகள் விசாரணை, அதிகாரபூர்வ ஆவணங்களை வெளியிடுவதற்கான வழிகாட்டுதல், ஆவண முகாமைத்துவம், விழிப்புணர்வு மற்றும் சட்ட அமுலாக்கத்தை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றது. இந்த செயல்பாடுகளில் தலைவரின் பங்கு முக்கியமானதாகும். எனவே, நியமனத்தை மேலும் தாமதிப்பது, ஆணைக்குழுவின் செயல்திறனையே பாழாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா எச்சரிக்கின்றது.
RTI சட்டத்தின் பிரிவு 12(2) இன் படி, ஆணையர் அல்லது தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுபவர், பொது வாழ்வில் தம்மை தனித்துவமாகக் காட்டிய, அறிவு, அனுபவம் மற்றும் நேர்மையுடன் கூடிய நபராக இருக்க வேண்டும். எனவே, அரசியலமைப்புப் பேரவையால் பரிந்துரைக்கப்படுபவர்கள், அரசியல் விசுவாசம் அல்லது தனிநபர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்லாமல், பொது நலனில் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவை செய்த நபர்கள் ஆக இருக்க வேண்டும் என ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா வலியுறுத்துகிறது.
மேலும், சமீபத்தில் அரசியல் துறையிலும் அரசின் கீழுள்ள நிறுவனங்களிலும் இடம்பெற்ற நியமனங்களில், தகுதி மற்றும் திறமையைவிட அரசியல் விசுவாசம் மற்றும் கூட்டுறவு முக்கியத்துவம் பெறுவதாக அறிக்கையில் ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா சுட்டிக்காட்டியுள்ளது. இது வெளிப்படைத்தன்மை, நேர்மை, மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை என்பவற்றை மிகப்பெரிய முறையில் பாதிக்கக் கூடியது என ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா வலியுறுத்துகிறது.
அத்துடன், நலன் முரண்பாடு உருவாகக்கூடிய சூழ்நிலைகளை தவிர்க்கவும், நல்லாட்சி நடைமுறைகளுக்கான உறுதியான நடைமுறைகள் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவசியத்தையும் இந்த நியமனக் குறைபாடுகள் வெளிப்படுத்துகின்றன.
தகவலறியும் உரிமை என்பது, இலங்கையில் ஜனநாயகத்தின் முக்கியமான ஒரு தூணாகவே இருக்கிறது. அதன் நடைமுறைப்படுத்தலை நிலைத்த மற்றும் துல்லியமான முறையில் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இதற்கிணங்க, ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, ஜனாதிபதியும் அரசியலமைப்புப் பேரவையும், தலைமைப் பதவிக்கு உரிய நபரை விரைந்து, தகுதி மற்றும் நேர்மையுடன் நியமிக்குமாறு வலியுறுத்தி, இது ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கும் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM