உலக அளவில் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கிறார்கள் என்றும், ஆண்டுதோறும் இருபது மில்லியன் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் தருணத்தில் ... புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்பங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எட்ஜ் ரேடியோ சர்ஜேரி எனும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடனான சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உடலில் ஒவ்வொரு பாகத்திலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உடல் உள் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நிவாரணம் அளிப்பதற்கான சத்திர சிகிச்சை -கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் சவாலானதாக இருக்கிறது.
இந்நிலையில் சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய இரண்டு சிகிச்சையும் இணைத்து நவீன தொழில்நுட்பத்துடன் வழங்கும் எட்ஜ் ரேடியோ சரஜேரி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய சிகிச்சை புற்றுநோய் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்தை துல்லியமாக அவதானித்து, அங்குள்ள புற்றுநோய் செல்களை முற்றாக அழிக்கிறது. இதனால் நோயாளிகள் புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சை மற்றும் நிவாரண திறன் அதிகரித்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வைத்தியர் நாகராஜ் தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM