மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி 01 இலச்சத்து 28 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாறிய நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செற்பட்டுவந்தவர் அவர்களிடம் தான் விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று தருவாகவும் அதற்கு பணம் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரிடம் ஒருவர் 01 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபா உட்பட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவருக்கு எதிராக பணத்தை கொடுத்து ஏமாறிய இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
போலி குற்றப்புலனாய்வு பிரிவினராக நாடகமாடி வந்த அவரை அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (07) இரவு கைது செய்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நேற்று செவ்வாய்கிழமை (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM