வெற்றிகளை பெறுவதற்கு தடையாக இருப்பதில் முதன்மையான காரணி என ஆன்மீக முன்னோர்களாலும், ஜோதிட நிபுணர்களாலும் குறிப்பிடப்படுவது பித்ரு தோஷம். ஏனைய தோஷங்கள் இருந்தால் அதனை பரிகாரத்தின் மூலம் ஓரளவு அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும்.
ஆனால் பித்ரு தோஷத்திற்கு பரிகாரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் பித்ரு தோஷத்தை நீக்குவதற்கான சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் தொன்மையான சிவாலயங்களில் அதாவது 600, 700, 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிவாலயங்களில் அமாவாசை திதியன்று சிவப்பு ( செம்மரம் - நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சந்தனத்தை உங்கள் கைகளால் அரைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதற்கு அங்குள்ள இறைத் தொண்டு செய்யும் ஊழியரிடம் பணிவாக கேட்டு கொண்டால் உங்களது பிரார்த்தனை நிறைவேறும்.
அதன் பிறகு ஒரு தாம்பாள தட்டில் பச்சரிசி- வெல்லம் - அகத்திக்கீரை - கரும்பு - கருப்பு எள் ஆகியவற்றை வைத்து, அதை பசு மாட்டிற்கு பசியாற வழங்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து மூன்று அமாவாசை செய்தால் உங்களுடைய பித்ரு தோஷம் விலகும். அதன் பிறகு உங்களுடைய முயற்சியில் முழு வெற்றி கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM