உணவுகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூடவசதிகள் வடக்கில் இல்லை - யாழ் பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் கேதீஸ்வரன்

07 Jul, 2025 | 10:22 PM
image

(எம்.நியூட்டன்)

உணவுகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூடவசதிகள் வடக்கு மாணத்தில் இல்லை  இது தேசிய ரீதியிலான பிரச்சினையாக உள்ளது இதனை நிறுவுவதற்கு அரசாங்கம் யூ என் நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறது என யாழ்பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான  விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் விடயத்தில் நாம் இறுக்கமான நடைமுறை என்பதை கூறுகிறார்கள் ஆனால் இதற்கான பிரதான காரணமாக ஆனையிறவில் இருந்து யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நிர் குறிப்பாக சுண்ணாம்பு பாறையில் விலகல் ஏற்படுவதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிப்படையூம் சந்தர்பம் அதிகமாக இருக்கிறது இதனால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

 இதன் காரணமாக நாம் சுகாதார ரீதியில் இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டிய தேவை உள்ளது . இதனால் பாதிப்பைவதாக சிலர் கூறுகிறார்கள் ஆனால் பலரும் இதனால் இலாபகரமானதகவே உள்ளதாக எமக்கு கூறுகிறார்கள்  பொதுமக்கள் உணவகங்களுக்கு நம்பிசெல்லுகிறார்கள். 

உணவகங்களின் தரம் , தூய்மை சுகாதாரம் , காலாவாதியான உணவு பொருட்கள் விற்பனை தொடர்பில் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்றார். 

இந் நிகழ்வில் சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சின்  மேலதிக செயலாளர் என்.ஏ.கே.விஜேநாயக்க, சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் ஜெயந்த, தேசிய கல்வி நிறுவகத்தின் இலத்திரனியல் விரிவாக்கல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி  சிறி பிருந்திரன் ,சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி சுதர்சன்,  மற்றும் துறைசார் அதிகாரிகள்  , ஐக்கிய நாடுகள் சபையின்  உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08