(எம்.நியூட்டன்)
உணவுகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூடவசதிகள் வடக்கு மாணத்தில் இல்லை இது தேசிய ரீதியிலான பிரச்சினையாக உள்ளது இதனை நிறுவுவதற்கு அரசாங்கம் யூ என் நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறது என யாழ்பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் விடயத்தில் நாம் இறுக்கமான நடைமுறை என்பதை கூறுகிறார்கள் ஆனால் இதற்கான பிரதான காரணமாக ஆனையிறவில் இருந்து யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நிர் குறிப்பாக சுண்ணாம்பு பாறையில் விலகல் ஏற்படுவதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிப்படையூம் சந்தர்பம் அதிகமாக இருக்கிறது இதனால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக நாம் சுகாதார ரீதியில் இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டிய தேவை உள்ளது . இதனால் பாதிப்பைவதாக சிலர் கூறுகிறார்கள் ஆனால் பலரும் இதனால் இலாபகரமானதகவே உள்ளதாக எமக்கு கூறுகிறார்கள் பொதுமக்கள் உணவகங்களுக்கு நம்பிசெல்லுகிறார்கள்.
உணவகங்களின் தரம் , தூய்மை சுகாதாரம் , காலாவாதியான உணவு பொருட்கள் விற்பனை தொடர்பில் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்றார்.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.விஜேநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் ஜெயந்த, தேசிய கல்வி நிறுவகத்தின் இலத்திரனியல் விரிவாக்கல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிறி பிருந்திரன் ,சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி சுதர்சன், மற்றும் துறைசார் அதிகாரிகள் , ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM