மட்டக்களப்பில் அமைந்துள்ள Movie Club அமைப்பின் ஒழுங்கமைப்பில், எழுநாவால் தயாரிக்கப்பட்ட ‘நீர்த்த கடல்’ ஆவணப்படம் 2025 ஜூன் 21 சனிக்கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு American Corner-இல் திரையிடப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்கள் குறித்து மையம்கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், பலர் பங்கேற்று, விவாதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட், “இது காலத்தின் தேவை எனும் பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஆவணப்படம். காட்சியமைப்புகள் நன்றாக இருந்தன. குறிப்பாக, இதன் சாரம் கொண்ட நூலாசிரியரின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது,” எனத் தெரிவித்தார்.
அவரது மேலதிக கருத்தில், "ஆவணப்படத்தின் நேரத்தை சுருக்கி, தொழில்நுட்ப தரம் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்களின் பார்வைகளும் இதில் இடம்பெற வேண்டும்," எனவும் சுட்டிக்காட்டினார்.
இத்தயாரிப்பில், வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் என்ற போர்வையில் ஏற்படுத்தப்படும் கடலட்டை வளர்ப்பு பண்ணைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது தமிழ் மக்களின் கடல்சார்ந்த வாழ்வாதாரமும், மீன் மற்றும் கடல்வள மீதான உரிமையும், சூழலியல் சமநிலையும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை வெளிக்கொணர்கின்றது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM