bestweb

பெருந் தோட்டங்களில் பின் பற்றப்படும் தற்காலிக தொழில் முறைமையை நிறுத்தும் ஒரு கொள்கை உருவாக்கப்படும் ; தொழில் அமைச்சர் தொழிலாளர் செங்கொடிச் சங்கத்திடம் தெரிவிப்பு

06 Jul, 2025 | 05:26 PM
image

பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் தற்காலிக தொழில் முறைமையை நிறுத்தும் வகையில் ஒரு தெளிவான கொள்கை உருவாக்கப்படும் என தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்ணான்டோ தொழிலாளர் செங்கொடிச் சங்கத்திடம் உறுதி அளித்துள்ளார்.

தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தின்  ஆலோசகர் மேனகா கந்தசாமி தலைமையில் கண்டியிலுள்ள தொழிலாளர் செங்கொடிச்சங்க அங்கத்தவர்கள் குழு ஒன்று தொழில் அமைச்சரை வெள்ளிக்கிழமை (04) நேரில் சந்தித்தது. 

அதன் போது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதன்படி பின்வரும் விடயங்கள் தொடர்பாக அமைச்சர் உறுதி அளித்ததாக தொழிலாளர் செங்கொடிச்சங்கம் தெரிவித்தது.

பெருந்தோட்ட துறை தற்போது ஒரு தற்காலிக துறையாக படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. அத்துடன் இந் நிலமையுடன்  தொழிலாளர்களின் உடல் நல, பாதுகாப்பு சூழ்நிலைகள் கவனிக்கப்படுவதில்லை. 

குறிப்பாக முறையான கழிப்பறைகள் மற்றும் உணவு உண்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவு இன்மை என்பன தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் இன்றைய சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேற் கூறப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதோடு தற்காலிக வேலை முறைமை உருவாக்கும் நடைமுறை தொடர்பான  பல பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டத்கவும்தெரிவித்தனர்.  

இந்த பிரச்சினைகள் குறித்து  மேலும் கூடிய அக்கறை செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதுடன்  இது தொடர்பான விரிவான ஒரு கொள்கை உருவாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-11 06:21:00
news-image

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்...

2025-07-11 07:01:56
news-image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு,...

2025-07-11 05:43:42
news-image

வரி குறைக்கப்பட்டமைக்கான நிபந்தனைகளை வெளியிடுங்கள் ஐ.தே.க.பொதுச்...

2025-07-11 05:41:05
news-image

இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும்...

2025-07-11 05:38:39
news-image

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு...

2025-07-11 05:35:23
news-image

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள்...

2025-07-11 05:32:38
news-image

ஜனாதிபதி, பிரதமர் பனிப்போரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;...

2025-07-11 05:17:30
news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07