நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய நாட்டினரை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சுற்றுலா பயணிகளில் ஒரு குழுவினர் வேனில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து சுற்றுலா பயணிகளை துரத்தியபோது அவர்களைப் பாதுகாப்பாக வேனில் ஏற்றிய சாரதி இறுதியில் சாரதி இருக்கையில் ஏறும் போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த உடனே நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர் பின்னர் குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் சுற்றுலா பயணிகளை அதே வேனில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM