bestweb

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து.......! சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி.....எதிர்வரும் 24-25ம் திகதிகளில் யாழில் நினைவேந்தல் - குரலற்றவர்கள் குரல் அமைப்பு

Published By: Rajeeban

06 Jul, 2025 | 10:18 AM
image

சிறைகளுக்குள்  படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து.......! சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி.....எதிர்வரும் 24-25ம் திகதிகளில்யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வில் சமூக உறவு கொண்ட அனைத்து தரப்பினரும் தவறாது பங்கேற்று உறவுகளின் விடுதலைக்காக  ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தவேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி  நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது.இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பறிக்கப்பட்ட எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும்  கடமையாகும். 

 சுதந்திர வாழ்வின் உரிமைக்காக நித்தமும்  போராடிக் கொண்டிருக்கின்ற எமது தமிழினத்தை சட்டத்தின் பெயரால் அடக்கி ஒடுக்குவதற்கென்று ஆதிக்க அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் இனவிடுதலையின் பெயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது

 நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் மனிதாபிமானமின்றி கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன் 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

தமிழினத்தை வேரறுக்கும் வரலாற்றின் முதல் அத்தியாயமான 'ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாள் ஜூலை 25 ஐ முன்னிறுத்தி 

" சிறைகளுக்குள்

படுகொலை செய்யப்பட்ட     

  உயிர்களுக்கு 

  சிரம் சாய்த்து 

  நினைவேந்தி...!

  இன்று வரை சிறையிலே வாடும் 

  உறவுகளின் 

  விடுதலைக்கு

  வழியமைப்போம்...! " 

 அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன்  முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்' அமைப்பு  சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது.

 நினைவேந்தலை வலுப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்க ஈழத்து சூழலில் மட்டுமன்றி அயலகமான தமிழகம் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பன்னாட்டு தமிழ் உணர்வாளர்கள் தமிழர் அமைப்புகள் மனித உரிமைவாதிகள்   பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக  அமைப்புக்கள்ஜனநாயகசக்திகள் எனஅனைத்து தரப்பினரிடமும் அந்தந்த நாடுகளில் இதேபோன்ற உணர்வுபூர்வ கவனக் குவிப்பு நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் உரிமையோடு வேண்டி நிற்கின்றோம். 

எதிர்வருகின்ற 24 மற்றும் 25ஆம் திகதிகளில் 

 யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) சுற்றயலில் இடம்பெறும் இந்த  நினைவேந்தல் செயற்பாட்டில்

 சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று 

" ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்குஅணி திரண்டு வலுச் சேர்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28