இலங்­கையில் யுத்தக் குற்றம் ஒரு­போதும் இடம்­பெ­ற­வில்லை

Published By: Raam

16 Jul, 2017 | 09:50 AM
image

இலங்­கையில் யுத்தக் குற்றம் ஒரு­போதும் இடம்­பெ­ற­வில்லை, யுத்தக் குற்­றச் சாட்டு என்ற பெயரில் எமது இரா­ணு­வத்தை தண்டிக்க எவ­ரேனும் வரு­வார்­க­ளாயின் அதற்கும் எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாம் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச  நீதி­மன்­றத்தில் நிறுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் உள்ள புலி­களை ஒரு­போதும் விடு­தலை செய்­யப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

இலங்­கையில் மோச­மான சித்­தி­ர­வ­தை கள் இடம்­பெ­று­வ­தா­கவும், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் எனவும், போர் குற்­றச்­சாட்டில் இரா­ணு­வத்தை விசா­ரிக்க வேண்டும் என்ற பிர­தான விட­யங்­களை ஐ.நா வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரி­வித்­துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில் விஜ­ய­தாச இந்த கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இது தொடர்பில் அவர் கூறி­யுள்­ள­தா­னது, 

இலங்கை  பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­படும் பெரும்­பா­லான கைதி­களை சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கு­வ­தாக கூறும் கார­ணி­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாம் மிகவும் ஒழுக்­க­மான சட்ட கொள்­கையை கொண்­டுள்ளோம். எம்மால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மோச­மான வகையில் செயற்­பட முடி­யாது. உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற  அறிக்­கை­களை கொண்டும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத  தக­வல்­களைக் கொண்டும்  கூறப்­படும் விட­யங்கள் தொடர்பில்  ஒரு அர­சாங்­கத்தின் மீதும் அதன் சட்ட தன்­மைகள் மீதும் குற்றம் சுமத்த கூடாது. இன்று மேற்­கத்­திய நாடு­களின் பலர் ஆதா­ர­மற்ற கருத்­துக்­களை வைத்தே அறிக்­கைகள் தாயா­ரித்து வரு­கின்­றனர். 

அதேபோல் 2008 விடு­த­லைப்­பு­லி­களை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்­துள்­ள­தாக கூறும் குற்­றச்­சாட்டும் பொய்­யான ஒன்­றாகும். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இரா­ணு­வத்­தினால் கைது செய்­யப்­பட்ட மற்றும் சர­ண­டைந்த புலி­களில் 12 ஆயிரம் பேர் முன்­னைய அர­சாங்­கத்­தினால் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். கடும் குற்­றங்­களில் கைது­செய்­யப்­பட்ட  71 புலி பயங்­க­ர­வா­திகள் மட்­டுமே இன்று தடுப்பில் உள்­ளனர். இவர்கள் யுத்த காலத்தில் மிகவும் மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட நபர்­க­ளாவர். பேருந்­து­களில் குண்டு வைத்­த­வர்கள், முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்ஷ்மன்  கதிர்­கா­மரை கொலை செய்த நபர்கள் என பல­த­ரப்­பட்­டடோர் இதில் உள்­ளனர். இவர்­களை எந்தக் காரணம் கொண்டும் விடு­தலை செய்ய முடி­யாது. 

யுத்தக் குற்றம் ஒன்று நாட்டில் இடம்­பெ­ற­வில்லை. இங்கு இடம்­பெற்­றது மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யாகும். அன்று எமது இரா­ணுவம் உறு­தி­யாக முன்­னே­றிய கார­ணத்­தினால் தான் இன்று வரையில் மாத்­திரம் அல்­லாது நாடு பூரா­கவும் மூவின மக்­களும் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் வாழக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாக்­கி­யுள்­ளது. எந்­த­வொரு யுத்­தமும் அமை­தி­யான முறையில் நடை­பெ­றாது. ஆனால் எமது இரா­ணுவம் ஒரு­போதும் இரா­ணுவ குற்­றத்தை மேற்­கொள்­ள­வில்லை. அதேபோல் எம்­மீது குற்றம் சுமத்தும் நபர்கள் முதலில் அவர்கள் செய்த மற்றும் செய்­து­கொண்டு இருக்கும் யுத்த குற்­றங்கள் தொடர்பில் முதலில் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். அதன் பின்னர் ஏனைய நாடு­களின் நிலை­மை­களை பார்க்­கலாம். யுத்த குற்­றச்­சாட்டு என்ற பெயரில் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க எவ­ரேனும் வரு­வார்­க­ளாயின்  அதற்கு  எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாம் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச  நீதி­மன்­றத்தில் நிறுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். 

 அதேபோல் நாட்டில் மனி­தா­பி­மான நகர்­வுகள் தொடர்பில் நாம் அர­சாங்கம் என்ற வகையில் பல­மாக முன்­செல்ல வேண்டிய தேவை உள்ளது. அவை தொடர்பில் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி வழங்கியுள்ளோம். அதற்காக இராணுவத்தை தண்டிக்கவும் யுத்த குற்றம் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அழுத்தம் கொடுக்குமாயின் அதை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. யாருக்கும் அடிபணிந்து செயற்பட நாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42