எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி விகிதாசார தேர்தல் முறைமையிலேயே இத்தேர்தல் நடைபெறவேண் டும் என அதிகளவில் விருப்பம் கொண்டிருக்கின்றது.
எனினும் எத்தகைய முறையில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பது என்பது குறித்து இறுதி முடிவுவொன்றை எட்டுவதற்காக எதிர்வரும் காலப்பகுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்டத்தினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கும் அக்கட்சி தயாராகி வருகின்றது.
இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் விகிதாசாரப்பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக எதிர்வரும் தேர்தல்களை முகங்கொடுப்பதென்ற உறுதிப்பாட்டுடன் இருக்கின்றது.
அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் தமது தொகுதியிலிருந்து பிரதிநிதியொருவரை தெரிவு செய்யவேண்டுமென்று விரும்புகின்றனர். ஆகவே அரசியலமைப்பு விடயத்திற்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தமொன்றே முன்னெடுக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் எந்தமுறையில் தேர்தலுக்கு முகங்கொடுப்பதென இதுவரையில் தீர்மானமொன்றினை எடுத்து இணக்கப்பாட்டிற்கு வராத நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நடைபெற்ற பிரத்தியேகச் சந்திப்பொன்றின் போது, பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கு பெரும்பாலான கட்சிகளிடையே கொள்கை அடிப்படையில் இணக்கம் காணப்பட்டுள்ள முறையான தொகுதிவாரி முறைமை 70 சதவீதமாகவும், விகிதாசர முறைமை 30சதவீதமாகவும் கொண்டதான கலப்பு முறையிலேயே உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள போதும் ஏனைய கட்சிகளின் இறுதி முடிவுகளையும் பரிசீலிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைபு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு தாம் உள்ளூராட்சி தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷின் அணியில் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினருடன் இணைந்து போட்டியிடுவதன் ஊடாகவே ஐ.தே.க.விற்கு பதிலடி வழங்க முடியும் என்ற தமது நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளனர். அதேபோன்று மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதையொத்த கருத்து அவருடய நம்பிக்கைக்குரிய நபர்களான அமைச்சர் மகிந்த அமரவீர, ஜோன் செனவிரட்ன போன்றவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதுகுறித்து எவ்விதமான கருத்துக்களையும் இரு தலைவர்களும் வெளிப்படுத்தியிருக்காத நிலையில் கூட்டு எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைமைகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் தனித்து பயணம் மேற்கொள்வதே சிறந்தது என்றும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM