அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் தினமும் நடமாடுவதால் பொதுப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் பகல் இரவு முழுவதும் ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.
அப்பகுதியில் உள்ள அரச, தனியார் நிறுவனங்களுக்கு முன்பாக தினமும் மாடுகள் நடமாடுவதால், அப்பகுதிகள் சுகாதார சீர்கேடான இடங்களாக மாற்றமடைந்ததோடு, அவ்விடமெங்கும் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது.
மேலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை பிரதான பேருந்து தரிப்பிடம், இலங்கை மின்சார சபை, கல்முனை பிரதேச செயலகம், வங்கிகள் உட்பட பல பகுதிகளில், இரவு வேளைகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சலால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதிலும் தற்போது இந்த விடயத்தில் கவனம் செலுத்தாதுள்ள நிலை காணப்படுகிறது.
இதனால் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் மாடுகள் படுத்துறங்குவது, நிற்பது பொதுமக்கள், வாகன சாரதிகளுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகின்ற கட்டாக்காலி மாடுகளை கல்முனை மாநகர சபை அதிகாரங்களைக் கொண்டு, ஏன் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகர சபையினால் கடந்த காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததைப் போன்று, எதிர்காலத்திலும் நடமாடித் திரியும் மாடுகளைப் பிடித்து, அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM