bestweb

மனித உரிமை உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள மதிப்பீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்

29 Jun, 2025 | 09:24 AM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க் இலங்­கைக்­கான தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்­ட­துடன் இறுதி மதிப்­பீட்டு அறிக்­கை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இலங்கை விஜ­யத்தின் போது அவர் அர­சாங்க தரப்பில் ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், நீதி­ய­மைச்சர், ஆளு­நர்கள், அரச அதி­பர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். அதே­போன்று அர­சியல் தலை­வர்கள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளிட்­டோ­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

கொழும்பில் மட்­டு­மன்றி கண்டி, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜ­யங்­களை மேற்­கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்­தா­னிகர் அங்கும் பல்­வேறு தரப்­பி­னர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

யாழ்ப்­பாணம் மற்றும் திரு­கோ­ண­மலை பகு­தி­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் உயர்ஸ்­தா­னி­கரின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். யாழில் செம்­மணி புதை­கு­ழி­களை பார்­வை­யிட்ட உயர்ஸ்­தா­னிகர் ,அங்கு ஏற்­றப்­பட்­டி­ருந்த அணையா தீபத்­துக்கும் அஞ்­சலி செலுத்­தினார். அதே­போன்று திரு­கோ­ண­ம­லையில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேர­டி­யாக வீதியில் சந்­தித்து உயர்ஸ்­தா­னிகர் கலந்­து­ரை­யா­டினார்.

இவ்­வாறு பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்­த­துடன் பல பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்­ததன் பின்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் தனது மதிப்­பீ­டு­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதன்­படி விஜ­யத்தின் இறு­தியில் நேற்று முன்­தினம் கொழும்பில் மதிப்­பீ­டு­களை வெளி­யிட்­டுள்ள என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க் ,செம்­ம­ணி­யா­னது கடந்­த­கால காயங்கள் மக்கள் மத்­தியில் இன்­னமும் ஆறாமல் இருக்­கி­றது என்­பதை உணர்த்­தி­யது.

கடந்­த­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை வழங்­கு­வது அர­சுக்கு சவா­லான விட­ய­மாக அமையும். பாதிப்பு இடம்­பெற்­றுள்­ளது என்­பதை ஏற்­பதும், உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­துமே காயங்­களை ஆற்­று­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­மான ஒரே வழி என்று அறி­வித்­தி­ருக்­கிறார்.

மேலும் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­க­ளுக்­கான உண்­மை­யையும், நீதி­யையும் பெற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டிய சுயா­தீன மற்றும் தட­ய­வியல் நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் மனி­தப்­பு­தை­கு­ழிகள் தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்  எனவும் உயர்ஸ்­தா­னிகர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் மீதான கண்­கா­ணிப்­புகள் தொடர்­கின்றன. சமூ­கத்தின் முக்­கிய பங்­கா­ளி­யான சிவில் செயற்­பாட்­டா­ளர்கள் மீதான கண்­கா­ணிப்பு முடி­வுக்கு கொண்­டு­ வ­ரப்­பட வேண்­டி­யது அவ­சியம். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

அச்­சட்டம் நீக்­கப்­படும் வரை அதன் பிர­யோகம் இடை­நி­றுத்­தப்­பட வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்றும் எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறார்.

அந்த வகையில் சகல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக அவர் தனது மதிப்­பீ­டு­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இந்த விட­யங்­களை கருத்திற் கொண்டு அர­சாங்கம் அடுத்­த­ கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

தமிழ்ப்பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­வ­கையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே­போன்று யுத்தம் கார­ண­மாக ஏற்­பட்­டி­ருக்­கின்ற அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க பொறி­மு­றையை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்டும் என்­ப­துடன் அவர்­க­ளது காயங்கள் ஆற்­றப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க் இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே இங்கு வருகை தந்தார். ஆரம்­பத்தில் அவ­ரது வருகை இந்த நேரத்தில் பொறுத்­த­மா­ன­தல்ல என சிவில் சமூக தரப்­பி­னரும், பாதிக்­கப்­பட்ட மக்­களும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். இலங்கை தொடர்பில் தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்ற பிரே­ரணை இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் நிறை­வ­டை­கி­றது. அதன் பின்னர் செப்­டெம்பர் மாத அமர்வில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு புதிய பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அண்­மையில் வடக்கில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் சுமந்­தி­ரனை சந்­தித்த இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் அன்ரூ பெட்ரிக் செப்­டெம்பர் மாதம் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்று முன்­வைக்­கப்­படும் என கூறி­யி­ருந்தார்.

அந்த அடிப்­ப­டையில் செப்­டெம்பர் மாத அமர்வில் இலங்கை குறித்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்­தா­னிகர் இலங்­கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என பாதிக்­கப்­பட்ட மக்­களும் சிவில் சமூகத் தலை­வர்­களும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். எனினும் அந்த கரி­ச­னை­க­ளையும் தாண்டி வோல்கர் டேர்க் அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்­தி­ருக்­கிறார்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க் முன்­வைத்­தி­ருக்­கின்ற விட­யங்கள் தாக்கம் செலுத்தக் கூடி­ய­தா­கவே இருக்­கின்­றன. அதா­வது கடந்த காலங்­களில் தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளன என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக இருக்­கி­றது. காரணம் கடந்த கால தவ­று­களை ஆராய்ந்து உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­மாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச சமூ­கமும் கடந்­த­ கால மீறல்கள், தவ­றுகள் தொடர்­பா­கவே தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றது. எனவே இந்த விட­யங்­களில் அர­சாங்கம் உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும். தற்­போது இலங்கை வந்து சென்­றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 60ஆவது அமர்வில் இலங்கை தொடர்­பான விவ­ர­மான நீண்ட அறிக்­கையை வெளி­யி­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணையில் உயர்ஸ்­தா­னி­கரின் இலங்கை விஜ­யத்தின் மதிப்­பீ­டுகள் தாக்கம் செலுத்தும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் உயர்ஸ்­தா­னிகர் முன்­வைத்­தி­ருக்­கின்ற மதிப்­பீ­டுகள், கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்கம் உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்­சி­னைக்கு விரைவில் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க பொறி­முறை இத­ய­சுத்­தி­யுடன் உரு­வாக்­கப்­பட்டு அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் 16 வரு­டங்­க­ளாக தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரிந்­து­கொள்ள முடி­யாமல் வேத­னை­யுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். அதனை இம்­முறை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் நேர­டி­யாக கண்­டி­ருக்­கிறார்.

எனவே, இந்தப் பிரச்­சி­னைக்கு விரைவில் ஒரு சுயா­தீ­ன­மான பொறி­மு­றையில் தீர்­வுகள் எட்­டப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் யாரையும் தண்­டிக்­கு­மாறு அவர்கள் போராட்டம் நடத்­த­வில்லை. மாறாக தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறும் யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மீறல்கள் தொடர்பில் பதி­ல­ளிக்­கு­மாறும் உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­மாறும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

ஒரே இரவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்­கவோ காயங்­களை ஆற்­றவோ முடி­யாது என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தற்­போது யுத்தம் நிறை­வ­டைந்து 16 வரு­டங்கள் கடந்து விட்­டன. இனியும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. நீதி கிடைப்­ப­தற்கு முன்பதாக அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு முன்பதாக நாங்கள் மரித்து விடுவோமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை அடையத் தொடங்கி விட்டனர்.

இந்த விடயத்தை அவர்கள் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தா னிகரிடமும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே இந்த விடயங்கள் உணர்வு பூர்வமான மற்றும் ஆழமான அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன.

அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள், கரிசனைகள், நம்பிக்கைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற வேதனை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். அதனை நோக்கமாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியிருக்கின்ற கரிசனைகள் மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஆழமான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும் மீறல்களை ஆராயவும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டுகிறோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பந்தனின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்...

2025-07-13 15:44:53
news-image

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்துங்கள்

2025-07-06 15:48:58
news-image

மனித உரிமை உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள மதிப்பீடுகள்...

2025-06-29 09:24:22
news-image

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை...

2025-06-22 17:21:05
news-image

மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்...

2025-06-15 17:25:28
news-image

வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை...

2025-06-08 14:10:51
news-image

ஐ.நா.வின் தவறுக்கு இனியாவது பரிகாரம் காணப்பட...

2025-06-01 11:01:57
news-image

சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக்...

2025-05-25 16:27:45
news-image

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

2025-05-18 12:49:46
news-image

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...

2025-05-04 11:22:25
news-image

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

2025-04-27 14:11:28
news-image

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...

2025-04-12 16:49:51