மீன்களை நுகர்வோருக்கு நியாயமான விலைக்கு வழங்குவது, மீனவர்களின் ஓய்வூதிய அதிகரிப்பு, வாழ்வாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

25 Jun, 2025 | 11:17 AM
image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீன்பிடித் துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகும். நூற்றுக்கு நாற்பது வீதம் மீன்பிடி தொழிலையே பிரதானமாகக் கொண்டுள்ளனர் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். 

நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. சட்டவிரோத கடற்தொழிலை தடுப்பதோடு அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும்.

இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்றுமுழுதாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். 

இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே,

எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து மீனவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுள்ளோம்.

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களையும் ஊக்குவிக்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளோம் என்றார். 

மேலும், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற கொள்கை பிரகடனத்திற்கமைய 'நிலையான மேலாண்மை - தரமான மீன்வளம்' என்ற கொள்கை கட்டமைப்பு ஊடாக முறையான அறிவியல் முறைகள் மற்றும் நடைமுறை உத்திகள் மூலம் மீன்பிடித் தொழிலை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33