காத்தான்குடியில் விஷர் நாய்கள் ஆடுகளை கடித்த சம்பவம் – ஐந்து ஆடுகள் பலி

Published By: Vishnu

23 Jun, 2025 | 07:02 PM
image

காத்தான்குடியில் (23) திங்கட்கிழமை அதிகாலை நகர சபையை அண்மித்த ஷைஹுல் பலாஹ் வீதியில் விஷர் நாய்க்கூட்டம் ஒரு காணியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு ஆடுகளை கடித்தது. இதில் ஐந்து ஆடுகள் பலியாகி, ஒன்று காயமடைந்துள்ளதாக காணப்பட்டு வருகின்றது.

காணியில் இருந்த ஒரு சிறிய வழியூடாக நுழைந்த நாய்கள், ஆடுகளை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளன. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளருக்கு சுமார் ரூ.1.5 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த நாய்கள் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையில், இன்று ஆடுகள் எனில் நாளை மக்களும், சிறுவர்களும் தாக்கப்படக் கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாவனையற்ற நாய்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நகர சபையின் கடமையாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விரைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06