bestweb

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜயம் திருப்­பு­மு­னை­யா­குமா?

Published By: Digital Desk 2

22 Jun, 2025 | 05:21 PM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் வோல்கர் டேர்க் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு நாளை திங்கட்கிழமை (23) இலங்­கைக்கு வருகை தர­வி­ருக்­கிறார்.

26ஆம் திக­தி­வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர், அர­சாங்கத் தரப்பு உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கிறார். அத்­துடன் யாழ்ப்­பாணம், கண்டி, திரு­கோ­ண­மலை உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கும் அவர் விஜயம் செய்­ய­வி­ருக்­கிறார்.

ஆரம்­பத்தில் ஐ.நா.    மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங் கை விஜ­யத்­துக்கு பல்­வேறு தரப்­பி­னரும் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 60ஆவது கூட்டத் தொடர்பில் இலங்கை தொடர்­பான புதிய பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளதால் அதன் பின்னர் அவர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது பொருத்­த­மாக இருக்கும் என்று பாதிக்­கப்­பட்ட மக்­களும் சிவில் சமூக தரப்­பி­னரும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இது தொடர்­பாக கடி­தங்­களும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அனுப்­பப்­பட்­டன. ஆனால் இந்த அனைத்து விட­யங்­க­ளையும் கடந்து தற்­போது ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

கடும் சர்ச்­சைக்குப் பின்­ன­ரும்­கூட அவ­ரது இலங்கை விஜயம் உறு­தி­யா­கி­யுள்­ளதால் அவர் இலங்கை வரும் போது   யாரை சந்­திக்க வேண்டும்? எத்தகைய விட­யங்­களை வலி­யு­றுத்த வேண்டும் ?என்­பது தொடர்பில் உள்­நாட்டு சிவில் சமூக அமைப்­பி­னரும் சர்­வ­தேச மனித உரி­மைகள் நிறு­வ­னங்­களும் பாதிக்­கப்­பட்ட மக்­களும் பல்­வேறு விட­யங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

சர்­வ­தேச மன்­னிப்புச் சபை, சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் போன்ற அமைப்­புக்­களும் இது தொடர்பில் அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி இலங்­கை­யிலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரும் சிவில் சமூ­கத்­தி­னரும் இது தொடர்­பாக யோச­னை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். ஆரம்­பத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­வ­தற்கு ஏற்­பா­டாக இருக்­க­வில்லை. எனினும் பாரிய அழுத்­தத்தின் பின்னர் தற்­போது அவர் யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்­ய­வி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அது ­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் முள்­ளி­வாய்க்கால் பகு­திக்கு விஜயம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்தில் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

உண்­மையில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்­கைக்கு விஜயம் செய்­வது முக்­கி­ய­மான நிகழ்­வா­கவே இருக்­கி­றது. சிவில் சமூகத் தரப்­பி­னரை பொறுத்­த­வ­ரையில் செப்­டெம்பர் மாதத்­துக்கு பின்னர் அவர் இலங்­கைக்கு வரு­வது பொருத்­த­மாக இருக்கும் என்று வலி­யு­றுத்­து­கின்­ற­னரே தவிர, அவ­ரது வரு­கையை எதிர்க்­க­வில்லை. காரணம், ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜ­ய­மா­னது எந்­தக்­கா­ரணம் கொண்டும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யற்ற தன்­மையை தோற்­று­விக்­கக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் நீதிக்­கான போராட்­டத்தை வலுப்­ப­டுத்­து­வ­தா­கவும் மேம்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைய வேண்டும். இதன் கார­ண­மா­கவே செப்­டெம்பர் மாதத்­துக்குப் பின்னர் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது பொருத்­த­மாக இருக்கும் என்று கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

எப்­ப­டி­யி­ருப்­பினும் அவர் தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் அடுத்­த ­கட்­ட­மாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள், நகர்­வுகள் இடம்­பெற வேண்டும் என்­பதை ஆராய வேண்­டி­யி­ருக்­கி­றது. ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் வோல்கர் டேர்க் இலங்கை விஜ­யத்தின் போது அர­சாங்­கத்தின் உயர்­மட்ட தரப்­பி­னரை சந்­திப்பார். ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், நீதி­ய­மைச்சர் உள்­ளிட்ட முக்­கிய தரப்­பி­னரை அவர் சந்­திப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான அழுத்­தத்தை மனித உரி­மைகள் ஆணை­யாளர் பிர­யோ­கிக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் கடந்த 16 வரு­டங்­க­ளாக நீதிக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே அவர்­களின் அந்த நீதிக்­கான கோரிக்கை மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம் எவ்­வாறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்க முடியும் என்­பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­பது அவ­சி­ய­மாகும்.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்­கைக்­கான விஜ­யத்தை சரி­யான முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அது­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் சிவில் சமூக தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது அந்தத் தரப்­பி­னரின் குரல்­களை ஆணை­யாளர் செவி­ம­டுக்க வேண்டும். விசே­ட­மாக பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் ஏன் சர்­வ­தேச சமூ­கத்தின் பங்­க­ளிப்­பு­ட­னான விசா­ரணை பொறி­மு­றையை கோரு­கின்­றனர் என்­பது தொடர்­பாக ஆராய்ந்து அதற்கு பதி­ல­ளிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐ.நா. மனித உரி­மைகள்   அலு­வ­லகம் தமக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் என நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் இது­வரை எட்டு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அந்தப் பிரே­ர­ணை­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் பொறி­மு­றைகள் எப்­படி அமைய வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் யுத்தம் முடிந்து 16 வரு­டங்கள் கடந்தும் இன்னும் ஆக்­க­பூர்­வ­மான எந்த நட­வ­டிக்­கையும் இடம்­பெ­ற­வில்லை என்­பதும் இங்கு தீர்க்­க­மான விட­ய­மாக உள்­ளது.

அதனால் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜ­ய­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான ஒரு வழியை திறப்­ப­தாக அமைய வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட்டில் ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வை­யா­னது இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட வேண்டும். இதற்கு முன்­னரும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளர்கள் சிலர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளனர். ஆனாலும், அந்த விஜ­யங்­களின் பின்னர் கூட இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை. தொடர்ந்தும் அந்த மக்கள் நீதிக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

எனவே இம்­முறை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் விஜ­ய­மா­னது திருப்­பு­மு­னை­யாக அமை­யுமா என்­பது கேள்­வி­யாக இருக்­கி­றது.

இலங்கை தொடர்பில் தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்ற பிரே­ர­ணை­யா­னது இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் நிறை­வுக்கு வரு­கி­றது. இதன் கார­ண­மா­கவே செப்­டெம்பர் மாதம் புதிய பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. செப்­டெம்­பரில் நடை­பெ­ற­வுள்ள 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வரு­வ­தற்கு இணை அனு­ச­ரணை நாடுகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் செப்­டெம்பர் மாத அமர்­வா­னது பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் விசே­ட­மா­ன­தாகும். அத­னா­லேயே செப்­டெம்­ப­ருக்கு பின்னர் இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை விஜயம் செய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரியிருந்தனர்.

தற்போது இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஒரு மைல் கல்லாகவும் திருப்புமுனையாகவும் செயற்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும்.

தமது நீதிக்கான போராட்டம் எந்தவொரு கட்டத்திலும் வலுவிழக்காது என்ற நம்பிக்கையை இந்த மக்கள் மத்தியில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் அவரின் விஜயம் எவ்வாறான விளைவுகளை தரப் போகிறது என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான பயணத்தில் முக்கியமாக அமையும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் முதன்மை ரீதியாக கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பந்தனின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்...

2025-07-13 15:44:53
news-image

செம்மணி புதைகுழி விவகாரத்தில் உண்மையை வெளிப்படுத்துங்கள்

2025-07-06 15:48:58
news-image

மனித உரிமை உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள மதிப்பீடுகள்...

2025-06-29 09:24:22
news-image

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை...

2025-06-22 17:21:05
news-image

மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்...

2025-06-15 17:25:28
news-image

வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை...

2025-06-08 14:10:51
news-image

ஐ.நா.வின் தவறுக்கு இனியாவது பரிகாரம் காணப்பட...

2025-06-01 11:01:57
news-image

சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக்...

2025-05-25 16:27:45
news-image

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

2025-05-18 12:49:46
news-image

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...

2025-05-04 11:22:25
news-image

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

2025-04-27 14:11:28
news-image

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...

2025-04-12 16:49:51