உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பசுமை சக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு முன்வருமாறு சீனா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அழைப்புவிடுத்துள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் கடந்த 18 - 21 வரையில் நடைபெற்ற 9 ஆவது சீன தெற்காசிய கண்காட்சி மற்றும் 6 ஆவது சீன தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பங்கேற்றார்.
இவ்வாண்டு கண்காட்சியின் தொனிப்பொருள் நாடாக இலங்கை இடம்பெற்றதால், இக்கண்காட்சி இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
6 ஆவது சீன தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, மக்கள்தொகைசார் வலிமை, மூலோபாய அமைவிடம், உலகளாவிய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் பங்கு, கலாச்சார மற்றும் புலமைச் சொத்துக்கள் ஆகியற்றைக் கொண்டுள்ள தெற்காசியாவின் பிராந்திய ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக அமைவதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பசுமை சக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு முன்வருமாறு சீனா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
அதேவேளை வெள்ளிக்கிழமை யுனான் மாகாணத்தின் துணை ஆளுநருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்திய பிரதி அமைச்சர், அதன்போது பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடை, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து ஆராய்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM