கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மல்வானை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 54 வயதுடைய பெண் சந்தேகநபர்கள் இருவரும் ரனால பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஒருவருமே செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
அதனடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டின் முக்கிய சந்தேக நபருக்கு உதவிய இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் ஒரு ஆண் சந்தேக நபர் மல்வானை மற்றும் ரனால பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM