மூன்றரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராகம பொலிஸ் பிரிவின் கெசல்வத்த பகுதியில் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் 01 கிலோ 738 கிராம் நிறையுடய ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 504 கிராம் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதுடன் பயணித்த கார் ஒன்றையும் அதிரடிப்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ராகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM