யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன், மனைவி ஆகிய இருவரும் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்துவருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்த நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட கணவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM