அரசியல் ரீதியாக முக்கியமான கட்டத்தில் இருக்கும் நாம் இச் சூழ்நிலையில் தனிபட்ட குரோதங்களையும் முரண்பாடுகளையும் வைத்து பிரிந்து செல்வதென்பது எமக்கே நஷ்டமாக அமையும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி தவிர்ந்து தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று ஏற்பட வேண்டும் என்பது தொடர்பாக பேசிவருகின்ற நிலையில் இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என முதலமச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது விடயமாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாங்கள் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். எங்களுடைய அரசியல் ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்நிலையில் எந்த விதத்திலும் எமது தனிப்பட்ட குரோதங்களையும் முரண்பாடுகளையும் வைத்துக்கொண்டு பிரிந்து செல்வதென்பது எமக்கே நஷ்டமாக அமையும். இச் சந்தர்ப்பத்தில் எந்தவிதமான பிரிவினைக்கும் நாம் இடமளிக்க கூடாது. என தெரிவித்தார்.
இதேவேளை தற்போது பேசப்படுகின்ற மாற்றுத் தலைமை தொடர்பான பேச்சுக்கள் உங்களை மையப்படுத்தியே இடம்பெறுவதால் அத்தகைய மாற்றுத் தலமைக்கான கோரிக்கை உங்களிடம் விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என வினாவிய போது, அந்த நேரத்தில் அது தொடர்பாக பார்ப்போம் என முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM