புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும் - ஜனாதிபதி

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 12:05 PM
image

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என  மக்கள் எதிர்­பார்­கின்­றனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.   

தெஹி­அத்த கண்­டிய மகா­வலி  சாலிகா மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

அவர்  அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய  சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அதில் பல உப குழுக்­களும் உள்­ளன. அவர்கள் தற்­போதும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான  அறிக்­கை­களை தயா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

 அந்த குழுக்­களின் அறிக்­கை­களை தொகுத்து அர­சாங்கம் தனி­யான ஒரு அறிக்­கையை தயார் செய்யும். அதன் பின்னர் அந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதன் பின்னர் அதற்கு ஆத­ரவு,எதிர்ப்பு, திருத்­தங்கள் மற்றும் பரிந்­து­ரைகள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பேசப்­படும்.

அதன் பின்­னர்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மொத்த வடிவம் தயார் செய்­யப்­படும். அதனால் என்­னி­டத்­திலோ அல்­லது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டத்­திலோ தற்­போது வரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான ஒரு வித­மான பத்­தி­ரங்­களும் இல்லை.

அவ்­வாறு உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில்  ஒற்­றை­யாட்­சியில் எந்­த­வித மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. பெளத்த மதத்தின் முன்­னு­ரி­மைக்கும் எது­வித பங்­கமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. குறிப்­பாக பெளத்த மதம் தொடர்­பி­லான அத்­தி­யா­யங்­களை மாற்றம் செய்­ய­மாட்டோம்.

எவ்­வா­றா­யினும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் மக்­க­ளுக்கும் எதிர்­பார்ப்­புக்கள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என கருதுகின்றார்கள். 

 எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49