(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மிகவும் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் மதிய போசன இடைவேளையின்போது 4 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதலாம் நாள் ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சதங்கள் குவித்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிமும் 4ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்ங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷன்டோ 148 ஓட்டங்களைப் பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 383 ஓட்டங்களாக உயர்த்தினர்.
முஷ்பிக்குர் ரஹிம் 7 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM