bestweb

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி; மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டது

Published By: Vishnu

18 Jun, 2025 | 03:31 AM
image

முல்லைத்தீவு - சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் செவ்வாய்க்கிழமை (17) அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு முயச்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய காணிகளை கடற்படையினர் அபகரித்துள்ளதுடன், குறித்த காணிகளில் அத்து மீறி முகாம் அமைத்துத் தங்கியுள்ளனர்.

குறிப்பாக நான்குபேருக்குரிய, இரண்டு ஏக்கர் காணிகளையே கடற்படையினர் இவ்வாறு அபகரித்து அத்துமீறித் தங்கியுள்ளனர்.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை (17)  குறித்த காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக கடற்படையினருக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே அப்பகுதி மக்களுடைய எதிர்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், அப்பகுதி கிராம பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32