''முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டடங்களை அரச உடமையாக்கும் திட்டத்தை கோத்தபாயவே மேற்கொண்டார்''

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 01:04 PM
image

நக­ரங்­களில் இருக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை அர­சு­ட­மை­யாக்கும் வேலைத்­திட்­டத்­தையே கோத்­த­பாய ராஜபக் ஷ மேற்­கொண்டார். அத­னையே தற்­போது நகர அபி­வி­ருத்தி அமைச்சு மேற்­கொள்­கின்­றது என தேசிய ஐக்­கிய முன்­ன­ ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

கடந்த அர­சாங்­கத்தில் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜபக்ஷ  நக­ரங்­களில் முஸ்­லி­ம்க­ளுக்கு சொந்­த­மான காணிகள் மற்றும் கட்­ட­டங்­களை அர­சு­ட­மை­யாக்கும் வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அதன் தொடர்ச்­சி­யா­கவே தற்­போது நகர அபி­வி­ருத்தி அமைச்சு மேற்­கொள்­கின்­றது. 

நகரின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்கு காணி மற்றும் கட்­ட­டங்­களை கைப்­பற்­றும்­போது அதற்­கு­ரிய நஷ்­ட­ஈ­டு­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்­க­வேண்டும். ஆனால் அவ்­வாறு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­திடம் பணம் இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் அர­சாங்கம் நகர அபி­வி­ருத்­திக்கு சொந்­தமான கட்­ட­டங்­களை மாத்­திரம் புதுப்­பித்து பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும்.

மேலும் கோத்­த­பாய ராஜபக் ஷ தான் அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­தி­ருந்தால் அதனை நிரூ­பிக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார். அர­சாங்கம் இவர்­தொ­டர்­பாக எடுத்­து­வரும் நட­வ­டிக்கை தொடர்­பா­கவே இவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு கார­ண­மாகும். கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற தாஜூதீன் கொலை­யுடன் கோத்­த­பா­ய­வுக்கு தொடர்­பி­ருப்­பது யாரும் அறிந்த விடயம்.  

அதே­போன்று ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் கொலை மற்றும் எக்­ன­லி­கொ­டவின் கடத்தல் போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு கோத்­த­பா­யவே பொறுப்பு கூற­வேண்டும். அத்­துடன் அமெ­ரிக்க தூத­ர­கத்­துக்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் செய்­த­வர்­களை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு முற்­பட்ட பொலிஸ் அதி­கா­ரியை அந்த இடத்தில் இருந்து வெளி­யே­று­மாறு அச்­சு­றுத்­தி­யது கோத்தாவாகும். 

அரசாங்கம் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தி சாட்சியங்களுடன் நிரூபிக்காமல் தொடர்ந்து காலம் கடத்திவருவதன் மூலம் அரசு ராஜபக் ஷ குடும்பத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49