வாஷிங்டன் இலங்கை தூத­ர­கத்தில் பணி­பு­ரிந்த பிரி­கே­டியர் தலை­ம­றைவு

Published By: Raam

12 Jul, 2017 | 01:23 PM
image

அமெ­ரிக்­கவின் வாஷிங்டன் நகரில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பணி­பு­ரிந்த பிரி­கே­டியர்  ஒருவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். சேவை காலம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் இரா­ணுவ தலை­மை­யகம் அவரை  நாடு திரும்­பு­மாறு அழைத்­ துள்ள நிலை­யி­லேயே அவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து அவரை கைது செய்­யு­மாறு சர்­வ­தேச பொலி­சா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. 

கஜபா படை­ய­ணியில் இணைக்­கப்­பட்­டி­ருந்த பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க என்­ப­வரே இவ்­வாறு தலை­ம­றை­வா­கி­யுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாது­காப்பு ஆலோ­க­ராக நிய­மிக்­கப்­பட்டு வொஸிங்­டனில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்­திற்கு பணிக்­காக அனுப்­பப்­பட்டார். 

2016 ஆம் ஆண்டில் அவ­ரது சேவை காலம் நிறை­வ­டைந்து நாடு திரும்ப வேண்­டிய நிலையில் அவர் இது­வ­ரையில் இலங்­கைக்கு வர­வில்லை. வொஸிங்டன் நகரில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்தின் புதிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கடற்­படை அதி­காரி ஒரு­வ­ருக்கு நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

தனது பதவி காலம் முடி­வ­டைந்தும் இது­வ­ரையில் பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க இரா­ணு­வத்தில் பணிக்கு திரும்­பாத நிலையில் , அவர் இரா­ணு­வத்தில் இருந்து தப்­பிச்­சென்­ற­வ­ராக கரு­தப்­பட்டு சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட உள்­ள­தாக இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரட்ண தெரி­வித்தார். 

பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுடன் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு சர்­வ­தேச பொலி­சா­ருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பல வருடகாலமாக இராணுவத்திற்கு கிடைத்து வந்த இராஜதந்திர பாதுகாப்பு ஆலோசகர் பதவி இனி கிடைக்காமல் போகும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49