4000 க்கும் அதி­க­மானோர் கைது

Published By: Raam

12 Jul, 2017 | 01:20 PM
image

உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடு­முறை பெற்­றுக்­கொள்­ளாத, விடு­முறை பெற்­றுக்­கொண்டு சென்று உரிய திக­தியில் திரும்­பாத மற்றும் அறி­விக்­காமல் கட­மை­யி­லி­ருந்து விலகிக் கொண்ட   4 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பாது­காப்பு படை­யினர்  கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.  பொது  மன்­னிப்­புக்­காலம் வழங்­கப்­பட்­டி­ருந்த  காலத்தில் சர­ண­டை­யாத முப்­ப­டை­யி­னரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

உத்­தி­யோ­க­பூர்வ விடு­மு­றை­யின்றி கட­மைக்கு சமு­க­ம­ளிக்­காத முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட சட்­ட­ரீ­தி­யான சேவை விலக்கு பெற்றுக் கொள்­வ­தற்­கான கால அவ­காசம் முடி­வ­டைந்­துள்­ளது. இந் நிலையில் உத்­தி­யோக பூர்­வ­மாக விடு­முறை பெற்­றுக்­கொள்­ளாத, விடு­முறை பெற்­றுக்­கொண்டு சென்று உரிய திக­தியில் திரும்­பாத மற்றும் அறி­விக்­காமல் கட­மை­யி­லி­ருந்து விலகிக் கொண்ட  நான்­கா­யி­ரத்­துக்கும் அதி­க­மான  பாது­காப்பு படை வீரர்கள்  இவ்­வாறு  கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

மேலும் கடந்த ஆண்டில் முப்­படை அதி­கா­ரி­க­ளுக்­கான பொது மன்­னிப்புக் காலம் இரு­முறை வழங்கப் பட்­டி­ருந்­தது. கடந்த  டிசம்பர் 01ஆம் திகதி தொடக்கம்  டிசம்பர் மாதம்  31ஆம் திகதி வரையில் இரண்டாம் பொது மன்­னிப்புக் காலமும்  முத­லா­வது பொது­மன்­னிப்பு கால அவ­காசம் கடந்த வருடம் ஜூன் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 12 ஆம் திகதி வரையும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் முப்­ப­டை­களின் 7 உயர் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட 4 ஆயி­ரத்து 74 பேர் மொத்­த­மாக கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

7 உயர் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட  3241 இரா­ணு­வத்­தி­னரும்,  765 கடற்­ப­டை­யி­னரும்  68 விமா­னப்­ப­டை­யி­னரும் இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு எதி­ராக பாது­காப்பு சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும்  பொது­மன்­னிப்பு காலம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து குறித்த கால எல்லை வரையில்  உத்­தி­யோ­க­பூர்வ விடு­மு­றை­யின்றி கட­மைக்கு சமு­க­ம­ளிக்­காத சுமார்  9000 முப்­ப­டையின் வீரர்கள் சட்­ட­ரீ­தி­யாக சேவை விலக்கு பெற்றுக் கொள்­வ­தற்­கான அனு­ம­தி­யினை பெற்­றி­ருந்­தனர்.  குறித்த இக்­கா­லத்­தினை பயன்­ப­டுத்தி இலங்கை இரா­ணு­வத்­தி­லி­ருந்து 11 அதி­கா­ரிகள் மற்றும் 7812 இராணுவ வீரர்களும், விமானப்படையிலிருந்து 21 அதிகாரிகள் மற்றும் 312 விமானப்படை வீரர்களும், கடற்படையிலிருந்து 2 அதிகாரிகள் மற்றும் 709 கடற்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57