(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும்.
தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார்.
இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார்.
அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM